Bangalore Raised voice for Jallikattu at Town Hall

பெங்களூரில் இன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடினர்.. வேறு வழி இன்றி காவல் துறை போராட்டத்தை தொடர அனுமதி அளித்தது.
சுமார் 3000 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை பெங்களூர் டவுண் ஹால் சந்திக்காத போராட்ட சக்தி இது என்று கூறினால் மிகையல்ல..
பீட்டா விற்கு எதிராகவும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும் முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
சுமார் 1.30 மணி நேரம் போராட்டம் நடை பெற்றது..
இதை விர பெரிய போராட்டத்தை நடத்த வேண்டும் , ஜல்லிக்கட்டு நடை பெறும் வரை போராடும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இளைஞர்கள் கலைந்து சென்றனர்...


Comments

all time Popular